×

கத்திமுனையில் டூவீலர் பறிப்பு

சேலம், மே7சேலம் இரும்பாலை எம்.கொல்லப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்(28). இவர் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் ஏவிஆர் ரவுண்டானா அருகில் உள்ள ரெடிமேடு கடையில் துணி வாங்கி விட்டு வெளியே வந்தார். கடையின் முன்பு நிறுத்தியிருந்த டூவீலரை எடுத்தபோது, திடீரென அங்கு வந்த 2 பேர், கத்தியை காட்டி மிரட்டினர். அவர் ஸ்டார்ட் செய்த டூவீலரை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ரஞ்சித், சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, டூவீலரை பறித்துக்கொண்டு தப்பிய நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கத்திமுனையில் டூவீலர் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Ranjith ,M. Kollapatti ,Irumpalai ,AVR Roundabout ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...